பழுதாகி இருந்த ரிக் இயந்திரம் 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது.
மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 53 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன் வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் ரிக் இயந்திரத்தின் மூலம் இன்று காலை 7 மணி முதல் சுமார் 15 மணி நேரமாக பல்வேறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு 35 அடி வரை தோண்டப்பட்டது. மேலும் அதிகமான பாறை இருப்பதால் பனி மிகவும் தொய்வு ஏற்பட்டதையடுத்து இதைவிட 3 , 4 மடங்கு விசை கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் வரவைக்கப்பட்டது. இந்நிலையில் தீடிரென முதல் ரிக் இயந்திரம் பழுதாகியுள்ளது. இதையடுத்து பணியாளர்கள் 30 நிமிடம் அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது குழியை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.