Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”நாடு திரும்புவோர் தனிமைப்படுத்தப்படுவார்கள்” சுகாதாரத்துறை தகவல் …!!

சீனாவில் இருந்து இந்தியா திரும்புவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக இருந்த நிலையில் தற்போதைய எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,982 பேர் இந்த வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 9,692 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் ,  பணியாளர்கள் என  அனைவரையும் இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகின்றது. இதையடுத்து சீனாவின் அனுமதியை பெற்ற இந்திய இன்று மதியம் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் இந்திய அழைத்து வர படுகின்றார்கள். 423 பேர் பயணிக்க கூடிய ஏர் இந்தியாவின் போயிங் பி747 டெல்லியில் இருந்து சீனா_வுக்கு செல்ல தயாராக இருக்கின்றது.

இந்நிலையில் சீனாவில் இருந்து நாளை அதிகாலை 2 மணிக்கு இந்தியா அழைத்து வரப்படுபவர்கள். கையுறை , உடலை மறைக்கும் ஆடையுடன் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள் என்றும் , டெல்லியில்தான் 14 நாள் இருப்பார்கள்.  குறைந்தது 14 நாள் தனிமைப் படுத்தப்படுவார்கள். இந்தியா திரும்பியவர்கள் அங்குள்ள மனோசர் பகுதியில் தங்கவைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுவார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |