கனடா அரசு, இன்றிலிருந்து சிலருக்கு பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.
கனடா அரசு, தங்கள் நாட்டிற்குள் வருபவர்களில், கனடாவின் குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் உடையவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கனடா அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் கனடாவிற்கு வரும்போது தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.
கனடாவின் குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டிருப்பவர்கள், அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர், செல்லுபடியாகக்கூடிய கல்வி உரிமம் கொண்ட சர்வதேச மாணவர்கள் மற்றும் செல்லுபடியாகக்கூடிய பணி உரிமம் கொண்டவர்கள், தற்காலிகமாக பணியாற்றக்கூடியவர்கள் போன்றோருக்கு இந்த தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசு, கனடா செல்லக்கூடிய நேரடி விமானங்களை வரும் ஜூலை மாதம் 11-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. கனடாவிற்கு மற்றொரு நாட்டின் வழியே செல்பவர்கள், கனடா புறப்படுவதற்கு முன்பாக அவர்களது நாட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.