Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

3 டன் 200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு காவேரிப்பாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி குற்றப்புலனாய்வு காவல்துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார், காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மூட்டைகளை மாற்றிக் கொண்டு இருந்தனர். இதை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து மூட்டைகளை சோதனை செய்ததில் 3 டன் 200 கிலோ ரேஷன் அரிசிகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர் கார்த்தி மற்றும் இளங்கோவன் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |