Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு அமெரிக்க அதிபர் கோரிக்கை… என்ன கேட்டிருக்கிறார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிணைகைதியாக வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க கடற்படை வீரரை விடுவிக்குமாறு தலீபான்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதிபர் ஜோ பைடன் தலிபான்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவை சேர்ந்த கடற்படை வீரரான மார்க் ஃப்ரீரிச்-ஐ ஆப்கான் படையால் பிணையக்கைதியாக வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தவறு ஒன்றும் செய்யவில்லை.

எனினும் இரண்டு வருடங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்கர்களோ  அல்லது எந்த அப்பாவி குடிமகனாக இருந்தாலும் சரி, அவர்களை அச்சுறுத்துவதை   ஏற்கமுடியாது. பிணையக்கைதிகள் என்பது கொடூரமாகவும், கோழைத்தனமாகவும் இருக்கிறது. அவரின் நலனுக்காக தலீபான்கள் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

Categories

Tech |