Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் உண்மையான காரணமா…? தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தாய் கண்டித்ததால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் தரகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தரகராக தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சீனிவாசன் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் கோபம் அடைந்த பத்மாவதி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சீனிவாசனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |