ஏபி டி வில்லியர்ஸ்-மெக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் , ஆர்சிபி அணி 204 ரன்களை குவித்துள்ளது.
14வது ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில், தொடங்கியது . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.தொடக்க வீரர்களாக விராட் கோலி -தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் .இதில் விராட் கோலி முதல் ஓவரிலேயே 6 பந்துகளில் , 5 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .இதன் பின் களமிறங்கிய ராஜட் படிதார் 2 பந்துகளில் ,1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார் .அடுத்து மெக்ஸ்வெல் களமிறங்கினார்.
இதன் பிறகு படிக்கல் 28 பந்துகளில் ,25 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க , ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினர் .ஏபி டி வில்லியர்ஸ்-மெக்ஸ்வெல் பாட்டனார்ஷிப் அதிரடி ஆட்டத்தை காட்டியது. வில்லியர்ஸ் 76 ரன்கலும் , மெக்ஸ்வெல் 78 ரன்களை எடுத்து ,இருவரும் அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இறுதியாக மெக்ஸ்வெல் ஆட்டமிழக்க ,ஜேமிசன் களமிறங்கினர் .இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் ,4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை குவித்துள்ளது . அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 205 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடுகிறது .