எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 66 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த பகுதிக்கு 36 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் ரயிலில் பயணம் செய்த பலர் இன்னும் மீட்கப்படவில்லை என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியால் சில சுயநினைவின்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் காலங்காலமாகவே எகிப்து ரயில்வே அமைப்பின் நிர்வாகம் மோசமானதாக இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் எகிப்து ரயில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 14.1 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. ஆனால் இந்த சூழலில் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று அந்நாட்டின் ஜனாதிபதி கூறியுள்ளார்.