Categories
உலக செய்திகள்

உணவு வாங்க சென்ற…. ராப் பாடகருக்கு நடந்த அசம்பாவிதம்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

பிரபல ராப் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் பாடகர் யெங் டால்ப். இவரின் இயற்பெயர் அடால்ப் ராபர்ட் தார்ன்டன் ஜுனியர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட முதல் ஆல்பமே மிகவும் பிரபலமானது. இந்த ஆல்பத்தை Youtubeல் லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் சொந்த ஊரான டென்னிசி மாகாணத்தில் இருக்கும் மெம்பிஸ் நகர விமான நிலையத்திற்கு அருகேயுள்ள கடையில் உணவுப்பொருள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அதிலும் அவர் உடல்நலம் சரியில்லாத உறவினரை பார்ப்பதற்காக கடந்த திங்கட்கிழமை டென்னிசி சென்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவரைக் கொல்ல முயற்சி ஓன்று நடந்தது.

ஆனால் அதில் அவருடைய கார் மட்டும் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பரில் அவரை குறிவைத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டால்ப் காயங்களுடன் உயிர் தப்பினார். தற்பொழுது அவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |