Categories
கிரிக்கெட் விளையாட்டு

சினம் கொண்ட சிங்கமாக மாறிய ரஹானே….. டெல்லிக்கு 192 ரன்கள் இலக்கு..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது 

ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ராஜஸ்தான்  சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர்.

தொடக்கத்திலேயே  ரபாடா வீசிய  2வது ஓவரில் சாம்சன் ஒரு பந்தும் எதிர் கொள்ளாத நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்தும், ரஹானேவும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும்  சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக ரஹானே தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினார்.

இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. அதன் பிறகு ஸ்டீவ் ஸ்மித் 50 (32)   ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் 8, டர்னர் 0, ஸ்டூவர்ட் பின்னி 19, ரியான் பராக் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை ஆடிய ரஹானே 63 பந்துகள் 105* ரன்கள் (3 சிக்ஸர்,11 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, அக்சர் பட்டேல், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதயடுத்து 192 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Categories

Tech |