Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆமை வேகத்தில் ஆடி… பின் சிறுத்தை போல சீறிய திவேதியா… அவரால் தான் வென்றோம்… ஸ்மித் பெருமிதம்..!!

ராகுல் திவேதியாவின் ஆட்டத்தால் தாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.. 

ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடியாக ஆடினர்.. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து 223 ரன்களை குவித்தது..

அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களையும், கேஎல் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் எடுத்தனர்.. மேலும் நிக்கோலஸ் பூரன் 25 ரன்கள் எடுத்தார்..  பின்னர் 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.. இதில் சுமித் அருமையாக ஆடினார்.. ஆனால் காட்ரெல் பந்துவீச்சில் பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்..

இதனையடுத்து கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் கைகோர்த்தனர்.. இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.. தங்களுக்கும் அதிரடியாக ஆட தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இவர்களது அடி இருந்தது.. பவர் பிளேயில் அதிரடியாக ஆடி 60க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தனர்.. அதன்பின் சாம்சன் வழக்கம்போல சிக்ஸர்களை பறக்கவிட்டார்.. சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்..

இதனையடுத்து 17 வது ஓவரில் சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார்..  இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிறைந்தது.. கடைசியில் ராகுல் திவேதியா காட்ரெல் வீசிய 18-வது ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு பஞ்சாப் வீரர்களை பதறவிட்டார்.. தொடக்கத்தில் ஆமை வேகத்தில் ஆடிக்கொண்டு இருந்த அவர் பின்னர் சூறாவளியாக மாறியது அந்த அணியினருக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது.. திவேதியா 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.. இதனால் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சேசிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது..

பின்னர் போட்டி முடிந்தவுடன் கேப்டன் ஸ்மித் பேசுகையில், “இந்த சேஸிங் மிகவும் அபாரமாக முடிவடைந்தது.. காட்ரெல் வீசிய அந்த ஒரு ஓவரில் ராகுல் திவேதியா ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டார்.. இந்த மைதானத்தின் சூழ்நிலையையும், அதன் தன்மையும் நாங்கள் கடந்த போட்டியிலேயே பார்த்திருந்தால் எங்களுக்கு தெளிவான ஐடியா இருந்தது.. இது சிறிய மைதானம் எனவே விக்கெட்டுகளை தொடக்கத்தில் விடாமல் வைத்திருந்தால் கடைசி வரை போட்டியில் வெற்றி வாய்ப்பு இருந்தது என்பதை நாங்கள் உணர்ந்து இருந்தோம்.. சாம்சங் மிகவும் அருமையாக கடந்த போட்டி போல இந்த போட்டியிலும் சிக்ஸர் அடித்துக் கொண்டிருந்தார்..

ராகுல் திவேதியாவின் ஆட்டம் எங்களுக்கு வெற்றியை கொண்டுவந்து சேர்த்துள்ளது.. ஒரு கட்டத்தில் அவர்கள் 250 ரன்களுக்கும் மேல் அடிப்பார்கள் என்று நினைத்தோம்.. ஆனால் எங்கள் பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்தினர் என்று ஸ்மித் கூறினார்..

Categories

Tech |