இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் 5ஆம் டி20 போட்டியில் இந்தியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் 12.30க்கு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோஹித் அணியை வழிநடத்தினார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் , சஞ்சு சாம்சன் களமிறங்கினர். 5 பந்துகளே ஆடிய சஞ்சு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து கேப்டன் ரோஹித் களமிறங்கி ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. இந்திய அணி 10 ஓவர்களுக்கு 84 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றது.
ராகுல் 38 (28)*
ரோஹித் 35 (27)*