Categories
உலக செய்திகள்

மாறி மாறி பழிவாங்கும் பிரபல நாடுகள்…. முக்கிய தகவலை வெளியிட்ட ஈரான்….!!

ஈரான் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

அமெரிக்க ராணுவம் கடந்தாண்டு ஈரான் நாட்டின் தலைநகரில் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி உயிரிழந்துள்ளார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் அந்நாட்டிலிருக்கும் அமெரிக்க படைகள் மீதும், அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ராணுவம் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு மாறி மாறி 2 நாடுகளும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்த நிலையில், தற்போது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஈரானின் தலைநகரான பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது 2 ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இந்த தகவலை ஈரான் நாட்டின் பாதுகாப்பு வட்டாரம் அறிவித்துள்ளது.

Categories

Tech |