புயல் காரணமாக தடுப்பூசிகள் விநியோகப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் புயல் ஓன்று தாக்கியதால் அதிகப்படியான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பால் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கறந்த பாலை விற்பனையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியாததால் உற்பத்தியாளர்கள் பாலை கீழே கொட்டி வருகின்றனர். அதிலும் சுமார் 2,000 பசு மாடுகள் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பசு மாடுகளை ட்ரக்குகள் மற்றும் ஜெட் ஸ்கீ படகுகள் மூலமாக மீட்கும் காட்சிகளானது இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி தடுப்பூசி விநியோகமும் தடைப்பட்டுள்ளது. அதாவது இது போன்ற மோசமான சூழ்நிலை உள்ளதால் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.