Categories
மாநில செய்திகள்

புதிய தளர்வுகள் என்னென்ன? அக்டோபர் 28 இல் முதலமைச்சர் ஆலோசனை…!!

மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.

நோய்த் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு தளர்வு குறித்த மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இதற்குப் பின்னர் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்  முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |