Categories
உலக செய்திகள்

இது என்னவாக இருக்கும்…? திடீரென்று தெரிந்த அரிய சாதனம்…. அதிர்ச்சியில் உறைந்து போன வாலிபர்….!!

இங்கிலாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் கடற்கரை வான்வெளியில் பெரிய பறக்கும் தட்டு போன்ற சாதனத்தை பார்த்து திகைத்துள்ளார்.

இங்கிலாந்தில் Devon கவுண்டி என்னும் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரைக்கு அருகேயிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 36 வயதுடைய matthew என்பவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய கண்களுக்கு கடற்கரையின் வான்வெளியில் பெரிய பறக்கும் தட்டு போன்ற சாதனம் ஒன்று தென்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த matthew அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

மேலும் இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, அந்த அரிய சாதனத்தை சுற்றி வெளிச்சம் இருந்ததாகவும், அது தன்னுடைய கண்களுக்கு புலப்பட்ட 10 ஆவது வினாடிகளில் வேகமாக சென்று மறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |