தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய் த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் முதல் வாரத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.