கன்னட சினிமாவில் காந்தாரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் குறுநில மன்னர் ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலங்களை, அவருடைய சந்ததியினர் பழங்குடியின மக்களிடம் இருந்து பறிக்க முயற்சி செய்யும் சம்பவம் தான் காந்தாரா கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில் கன்னட சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தாரா திரைப்படத்தின் டிரைலரை தற்போது நடிகர் கார்த்தி தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.