Categories
உலக செய்திகள்

“இவ்ளோ நேரமாவா டிவி பாத்துட்டு இருந்த?..” சிறுவனுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை…. விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!

சீன நாட்டில் அதிக நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனுக்கு தண்டனையாக இரவு முழுக்க அவரின் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்க வைத்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.

சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களின் 8 வயது மகனிடம்  “நாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நேரமாகும். எனவே, வீட்டு பாடங்களை முடித்துவிட்டு 8:30 மணிக்கு தூங்கு” என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர்  அதிர்ச்சியடைந்தனர்.

சிறுவன் வீட்டு பாடங்களை எழுதாமல், தூங்கவும் செல்லாமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனால் சிறுவனின் தாய்க்கு கோபம் ஏற்பட்டது. எனவே, அதற்கு தண்டனையாக இரவு முழுக்க சிறுவனை தொலைக்காட்சி பார்க்க வைத்திருக்கிறார். இந்த தண்டனையை அவரின் பெற்றோர் வீடியோ பதிவிட்டு இணையதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அதில், இரவு முழுக்க பெற்றோர், அந்த சிறுவனை தூங்க விடாமல் ஒருவர் மாற்றி ஒருவர் கண்காணித்திருக்கிறார்கள். அதிகாலை ஐந்து மணி வரை சிறுவனை அவர்கள் தூங்கவிடவில்லை. இந்த வீடியோ கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. பெற்றோர் இவ்வாறு செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் அந்த சிறுவன் மனதளவில் பாதிப்படைவார் எனவும் பலர் கூறி வருகிறார்கள்.

Categories

Tech |