புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலமாவடி பகுதியில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே முத்துகுட்டிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துக்குட்டி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் முடிவு உடனடியாக மீட்டு வெள்ளை நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர் ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருக்குறுங்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்