மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விபச்சாரம் நடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் கர்நாடகாவை சேர்ந்த மகத் மற்றும் கேரளாவை சேர்ந்த அஜித் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
அதன்பின் காவல்துறையினர் வங்காள தேசத்தை சேர்ந்த இரண்டு அழகிகளை பிடித்து விசாரித்த போது அவர்கள் அங்கிருந்து பாஸ்போர்ட் இல்லாமல் மேற்கு வங்காளம் வழியாக கோயம்புத்தூர் வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் இரண்டு அழகிகளையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.