ஊரடங்கு கட்டுப்பாட்டை பின்பற்றாமல் செயல்பட்ட 65 நபர்கள் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 60 நபர்களுக்கு காவல்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதனையடுத்து பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்டுக் கொண்டிருந்த 5 நபர்களுக்கு காவல்துறையினர் 2,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக 65 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.