Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சதவீத வாக்குப்பதிவு” மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி… உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்….!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில், மேலாளர் முத்துராமன் முன்னிலையில் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து உள்ளனர்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு துணை வட்டாட்சியர் அலமேலு முன்னிலையில் ஊர் பொதுமக்கள் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். அப்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வழங்குவோம் என பொதுமக்கள் உறுதிமொழி எடுத்தனர்.

Categories

Tech |