Categories
உலக செய்திகள்

“தலீபான்களின் அரசை ஆதரிக்காவிடில் உலக நாடுகளுக்கு பிரச்சனை!”.. தலீபான்கள் எச்சரிக்கை..!!

தலிபான்களின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானை அங்கீகரிக்காவிடில் உலக நாடுகளுக்கு பிரச்சினை உண்டாகும் என்று அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வதற்கு, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் தவிர வேறு எந்த ஒரு நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தலிபான்களின் செய்தி தொடர்பாளரான அபிமுல்லா முஜாஹித், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின்  ஆட்சியை அங்கீகரிக்காமல் இருந்தால் நாட்டில் அமைதி இல்லாத நிலை உண்டாகும். அதன்பின்பு, அது உலகநாடுகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Categories

Tech |