8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் அரியானா மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றது .
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 41-37 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா அணி போராடி வெற்றி பெற்றது.
இதில் ஹரியானா அணி 3 வெற்றி , 3 தோல்வி, 1 டிரா என 20 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. இதையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 31 – 26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது