தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடமாம்பாக்கம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கோதண்டம் வேலைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி பார்த்துள்ளனர். இதனை அடுத்து வடமாம்பாக்கம் பகுதியில் தனராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோதண்டம் தலை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோதண்டம் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.