நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24ஆம் தேதி என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் காஷ்மீருக்கு சென்று ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல இந்த வருடமும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக வரும் 21ஆம் தேதி அன்று கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி அதே நாளில் பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று வழிபட போகிறார்.
பின்னர் 23ஆம் தேதி அன்று அயோத்தியிள் நடக்கும் பிரம்மாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து இருபத்தி நான்காம் தேதி தீபாவளி தினத்தில் காஷ்மீர் பகுதிக்கு சென்று அங்குள்ள ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.