Categories
தேசிய செய்திகள்

எந்த சோதனையாக இருந்தாலும் சரி… இந்தியா மீண்டு வரும் என்பதே வரலாறு… மோடி அதிரடி பேச்சு..!!

எந்த சோதனையாக இருந்தாலும் அதிலிருந்து இந்தியா  மீண்டு வரும் என்பதே வரலாறு  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கு தொடக்க விழாவில்பங்கேற்ற பிரதமர் மோடி மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம் என்ற தலைப்பில் கருத்தரங்கில் பங்கேற்றார். இந்த கருத்தரங்கு இன்று முதல் 3 நாள் நடைபெறுகின்றது.. இதில் 30 நாடுகளை சேர்ந்த 5000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது, கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது. எந்த சோதனையாக இருந்தாலும் அதிலிருந்து இந்தியா  மீண்டு வரும் என்பதே வரலாறு.

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும். பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இயற்கையை இறைவனாக வழிபடுவதுதான் இந்தியர்களின் மரபு.. இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

மேலும் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. இலவச சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள், கடன் ஆகியவை பயனாளர்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்வெளித்துறையில் தனியாரும் கால்பதிப்பதற்க்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.

ஒருபுறம் இந்தியா உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக ஒரு வலுவான போரை நடத்துகிறது கடந்த 6 ஆண்டுகளில் தொழில் துவங்க எளிதான சூழல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் எதையெல்லாம் அசாத்தியம் என்று நம்பப்படுகிறதோ.. அவற்றை சாத்தியமாக்கி காட்டுவதற்கான திறமை இந்தியாவுக்கு இருக்கிறது.  உலக அளவில் இந்தியர்களின் திறமையின் பங்களிப்பை உலகம் கண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Categories

Tech |