தேனி மாவட்டத்தில் பாஜக கட்சியினர் இணைந்து பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பாதிரியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் பங்களாமேட்டில் நேற்று பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டியன், தேசிய செயற்குழு உறுப்பினர் கனகராஜ், கோட்ட செயலாளர் செந்தில்குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.