Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை – மோடி பெருமிதம்…!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது ஒவ்வொரு இந்தியருக்கு  பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு இரண்டு தடுப்பூசிகளும் அவசர ஒப்புதல் அளித்தது .

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் பல தடுப்பூசிகளும் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிகள் உலகிற்கு மிக அதிக அளவிலும், அதிக வேகத்திலும் உதவும் என்றும், இதனால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |