இந்தியாவின் சுற்றுபயணம் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம், வளர்ச்சி மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம் ஆகியவற்றை குறித்து பேசியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இணையதள பக்கத்தில் இந்தியப் பயணம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்தியாவும் இங்கிலாந்தும் மும்பையை விட நெருக்கமாக இணைந்து ஆழமான நட்பு உறவு கொண்டிருக்கின்றோம். இதனை தொடர்ந்து இருநாடுகளும் பசுமை தொழில் நுட்பம் பாதுகாப்பு துறை உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படும்.
இது மட்டுமின்றி இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் வளம் தரும் வர்த்தக உறவுகளிலும் ஒத்துழைப்பும் நீடிக்கும். மேலும் நான் இந்தியாவில் இருந்த இரண்டு நாட்களுமே அற்புதமானவை” என்று தெரிவித்துள்ளார்.