கடந்த 8 நாட்களாக தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு சென்ற 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி, பிரணாப் கோமா நிலையில் இருக்கிறார். இந்நிலையில், இன்று பிரணாப்பின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராணுவ மருத்துவமனை நிர்வாகம், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.