Categories
சினிமா

இதற்காக தான் பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை செய்து கொண்டாரா….? திரையுலகினர் அதிர்ச்சி….!!

திரைப் பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல திரைப் பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை(28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்திலுள்ள அவருடைய வீட்டில் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில், தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தூரிகை இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதனையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கிறது. எம்.பி.ஏ படித்திருக்கும் தூரிகை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர் “பீயிங் வுமன்” (Being Women) எனும் இணைய இதழையும் துவங்கி நடத்தி வந்தார். மேலும் தூரிகை எழுத்தாளராக மட்டுமின்றி ஆடை வடிவமைப்பாளர் ஆகவும் பல திரைப் படங்களில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரின் தற்கொலை சினிமா மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |