Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… 6.2-ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு…!!!

இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருக்கும் வடக்கு சுமத்ரா தீவில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

காலையில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |