Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி.. போர்ச்சுக்கல் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!

போர்ச்சுகல் உள்துறை அமைச்சகம், வரும் 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் மற்றும் கொரோனா பாதிப்பு குறைந்த மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்களும் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. 

போர்ச்சுகல் மே 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் மற்றும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் தங்கள் நாட்டிற்குள் வர அனுமதியளித்துள்ளது. போர்ச்சுகல் சுற்றுலா மையம், பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வரும் 17 ஆம் தேதி முதல் வரலாம் என்று அனுமதித்தற்கு அடுத்த நாள் உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி போர்ச்சுகல் உள்துறை அமைச்சகம், பயணிகள் நாட்டிற்குள் வந்தபின்பு பாதிப்பு இல்லை என்று சோதனை முடிவுகளை காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றது. மேலும் பயணிகள் புறப்படுவதற்கு சுமார் 72 மணி நேரங்களுக்குள் பரிசோதனை முடிவை எடுத்திருக்க வேண்டும் என்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |