Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில் பணியாளருக்கு ரூ1௦௦௦…. எப்படி கொடுக்குறாங்க தெரியுமா ?

கோவில் பணியாளர்களுக்கு பொங்கலுக்காக  1000 ரூபாயை வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் கருணை கொடையாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பகுதி நேரம், முழு நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை அல்லாத மற்றும் முதுநிலையில் உள்ள அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் இந்த கருணை கொடை தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2019-2020 ஆம் ஆண்டு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 240 நாட்களோ அல்லது அதற்கு மேலோ வேலை செய்திருந்தால் கருணை கொடையாக ரூபாய் ஆயிரமும், ஆறு மாதத்திற்கும் மேலாகவோ அல்லது 240 நாட்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களை கணக்கெடுத்து விகிதாச்சார அடிப்படையில் இந்த தொகையானது வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |