பொங்கல் திருநாளை ஒட்டி 3186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை மற்றும் சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்று தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு காவல் துறையில் ஆண் பெண் காவல் நிலைய தலைமைக் காவலர் என 3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்க உள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு துணையின் துறையில் முன்னணி தீயணைப்பு வீரர் என 120 அலுவலர்களுக்கும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் 60 நபர்களுக்கும் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
வானொலி பிரிவு, நாய் படைப்பிரிவு மற்றும் காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் ஆறு அதிகாரிகள் இந்த பதக்கங்களை பெற உள்ளனர். இந்த பதக்கங்களை பெரும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அவர்களின் நிலைக்கு தக்கவாறு ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இத்துடன் முதலமைச்சர் கையெழுத்துடன் கூடிய பதக்கம் சான்றிதழ் வழங்கப்படும்.