கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை, 5000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் செந்தில்நகரில் முருகன் என்கிற அருள்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென 3 மர்மநபர்கள் உள்ளே வந்து அவரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து அவரிடம் இருந்த செயின், மோதிரம் என 9 பவுன் நகை, 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறிப்பு முருகன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.