சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவர்களிடமிருந்து மொத்தமாக 7, 050 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரியாலூர் தனிப் பிரிவு காவல்துறையினர் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஈச்சங்காடு கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதற்காக பேரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்துவிட்டனர். பின்னர் இது தொடர்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் ஜெயபால் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துவிட்டனர். இதனை அடுத்து ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் இந்த நிலையை பயன்படுத்தி அரகண்டநல்லூர் அருகிலுள்ள ஒட்டம்பட்டு, வீரபாண்டி பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த அரகண்டநல்லூர் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனை தொடரந்து ஒட்டம்பட்டு, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 5,000 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அவற்றை கீழே ஊற்றி காவல்துறையினர் அழித்துவிட்டனர். மேலும் குடியநல்லூர் ஏரிக்கரை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டர் சாராய ஊழலை கண்டுபிடித்து காவல்துறையினர் கீழே கொட்டி அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சித்தலூர் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.