சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3200 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் அழித்துவிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் உள்ள தெற்குப்பட்டி வனத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு 16 பேரல்களில் 3,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துவிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சாராயம் காய்ச்சிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.