Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்யாணம் செய்து கொள்கிறோம்… 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை… மூவர் போக்சோவில் கைது…!!

ஆசைவார்த்தை கூறி 2 சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதியில் 16 வயதுடைய 2 சிறுமிகள் காணவில்லை என கீழராஜகுலராமன் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகாரளித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மற்றும் பொண்ணு பாண்டியன் இருவரும் 2 சிறுமிகளிடம் திருமணம் செய்வதாக ஆசையாக பேசி பாலியல் வன்கொடுமை செய்ததும், இதற்கு துணையாக சங்கிலியின் தாயார் சீனியம்மாள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 2 சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்தசம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கிலி, பொண்ணு பாண்டியன் மற்றும் உடந்தையாக இருந்த தாய் சீனியம்மாள் ஆகிய 3 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories

Tech |