Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தினமும் சிறுமிக்கு பாலியல் தொல்லை… மருத்துவமனை காவலாளி கைது..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் அடுத்துள்ள ராதாமங்கலம் தெற்காலத்தூர் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் வசிக்கின்ற அதே பகுதியில் தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் 9 வயது சிறுமியை ராஜேந்திரன் தனது வீட்டின் சொந்த வேலைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் சிறுமிக்கு தினமும் ராஜேந்திரன் பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.

அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் பற்றி புகார் கொடுத்தனர்.புகாரின் பேரில் ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |