கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து மீண்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து 25 வயது பெண் ஒருவர் மீண்டு வந்துள்ளார்.. இந்நிலையில், அலிகார் தீன் தயாள் மருத்துவமனையின் அரசு மருத்துவர் துஃபைல் அகமது(30) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதையடுத்து,சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆராய்ந்த பின்னர், மருத்துவர் பிபிஇ கிட் மற்றும் கையுறைகளை அணியாமல் தனிமை வார்டுக்கு சென்றார் என்று போலீசார் தெரிவித்தனர்.. பின்னர், குவார்சி போலீஸ் ஸ்டேஷனில் ஐபிசி 376 (2) டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதாக சிவில் லைன்ஸ் காவல் நிலைய வட்ட அலுவலர் அனில் சமனியா தெரிவித்தார்.