அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடியே தொங்கியபடியோ பயணம் செய்ய வேண்டும் என போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாத பள்ளி கல்லூரி மாணவர்கள் அலட்சியத்தோடு ஆபத்தான முறையில் இவ்வாறு பயணம் செய்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிகட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்துள்ளனர்.
மேலும் சிலர் ஓடும் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி நடனமாடவும் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மற்றொரு அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே ஆபத்தை உணராமல் இவ்வாறு பேருந்தில் படிகளில் தொங்கியபடியும் மேற்கூரையில் மீது நின்றும் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.