Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து காவல் ஆணையர் ஆலோசனை..!!

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது.

மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமலபடுத்தப்படுகிறது. அதேபோல, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். செங்கல்பட்டு, மறைமலை நகர் நகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு நேற்று அறிவித்திருந்தது. மேலும், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த நிலையில், சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Categories

Tech |