துடியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் வைசியால் வீதி பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரபாபு என்ற 28 வயது இளைஞர் நேற்று துடியலூர் பகுதி வெள்ளக்கிணறு இரயில் தண்டவாளம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்ததுள்ளார். இது பற்றி தகவலறிந்த துடியலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசந்திரபாபுவை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், அவரிடமிருந்து 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவரை துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் இவர் பல நாள்களாக பல்வேறு இடங்களில் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது கஞ்சா விற்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.