Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ 78,000 சம்பளம் வாங்குறேன்… என்னை லவ் பண்ணு… கல்லூரி மாணவியிடம் தவறான பேச்சு… மாநகராட்சி அலுவலரை தூக்கிய போலீஸ்..!!

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய மாநகராட்சி உதவி ஆணையரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் தன்னார்வலராக பணிபுரிய விருப்பம் தெரிவித்து கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தன்னார்வலராக மாநகராட்சியில் பணியாற்றி வரும் தனியார் கல்லூரி மாணவி ஒருவரிடம்  உதவி பொறியாளராக இருக்கும் கமல கண்ணன் என்பவர் ஆபாசமாக செல்போனில் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், “மாநகராட்சியில் உதவி பொறியாளர் என்கிற பொறுப்பு காவல் துறையில் உதவி ஆணையர் பொறுப்புக்கு சமமானது. நான் மாதம் ரூ 78 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். எனவே என்னை காதல் செய்யுமாறு பெண்ணிடம் கமல கண்ணன் கொஞ்சி கொஞ்சி பேசியுள்ளார்.

இதையடுத்து கல்லூரி மாணவி உடனடியாக எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கமல கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |