Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பிக்கவே முடியாது… முழுவதும் அதிரடி சோதனை… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுப்பதோடு, மது விற்பனை செய்வதையும் தடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் மது விற்பனை செய்த குற்றத்திற்காக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |