ராமநாதபுரம் அருகே மெக்கானிக் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் சீதக்காதி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய 38 வயது மகன் சரவணன் ராமநாதபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருக்கு கோமதி(31) என்ற மனைவி இருக்கிறார்.. இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துவிட்டு நெல்லையில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்..
இதனால் சரவணன் மனைவியை தொடர்பு கொண்டு பேசி குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால் கோமதி குடிப் பழக்கத்தை நிறுத்தாததால் தான் வரமாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து போன சரவணன் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து கோமதி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.