காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கிறது வீராணம் ஏரி.. இந்த ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரின் சடலம் கரையோரம் மிதந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு புத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏரியின் கரையோரம் மிதந்து கொண்டிருந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இந்தசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எரியில் ஆணின் சடலம் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.